அதன்படி, மாவட்டத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் இன்று (ஏப்ரல் 18ம் தேதி) வியாழக்கிழமை இன்று காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.90 லட்சத்து 26 ஆயிரத்து 707ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.94 லட்சத்து 81 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 870ம், பெருந்துறை தொகுதியில் ரூ.44 லட்சத்து 35 ஆயிரத்து 970ம், பவானி தொகுதியில் ரூ.31 லட்சத்து 76 ஆயிரத்து 400ம், அந்தியூர் தொகுதியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்து 250ம், கோபி தொகுதியில் ரூ.51 லட்சத்து 75 ஆயிரத்து 050ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.1 கோடியே 3 லட்சத்து 42 ஆயிரத்து 406ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 318 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.4 கோடியே 39 லட்சத்து 74 ஆயிரத்து 543 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 21 லட்சத்து 31 ஆயிரத்து 996 மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், 279 பேர் ரொக்கப் பணம் ரூ.3 கோடியே 26 லட்சத்து 39 ஆயிரத்து 203 ரூபாய் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள 39 பேரின் ரூ.1 கோடியே 13 லட்சத்து 35 ஆயிரத்து 340 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். முறையான ஆவணங்களை அளித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 coment rios: