வெள்ளி, 10 மே, 2024

ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய பழவகைகள் பறிமுதல்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், மற்றும் அருண்குமார் ஆகியோர் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 23 கிலோ அழுகிய நிலையில் உள்ள பழவகைகள் பறிமுதல் செய்து அழித்தனர். 
மேலும் பழ வியாபாரிகளிடம் பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைத்து உண்பதே சிறந்தது எனவும், செயற்கை முறையில் இரசாயனம் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைப்பதால் அப்பழங்கள் சாப்பிடும் பொது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் அறிவுறுத்தினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: