சனி, 11 மே, 2024

பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முகாசிப்புதூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி என்கிற வெங்கடேசன் (வயது 57). இவர், இன்று காலை அம்மாபேட்டை - அந்தியூர் சாலையில் பூதப்பாடி சேர்மன் தோட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பிக்கப் வேன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில், அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, புகாரின் பேரில் பிக்கப் வேன் ஓட்டுநர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: