ஞாயிறு, 12 மே, 2024

மின் நுகர்வோர் மன்றம் துவக்க விழா

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

மின் நுகர்வோர் மன்றம் துவக்க விழா நிகழ்ச்சி

சென்னை சிஏஜி வழிகாட்டுதலில் மின் நுகர்வோர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள், குறைகள் தீர்க்க ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் வழங்க 
மின் நுகர்வோர் மன்றம்
துவக்கப்பட்டது..

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் நிறுவனர் பூபதி தலைமை வகித்தார். வெங்கடேசன் வரவேற்றார். வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். வினோத்,மோகன், கனகராஜ் ஏற்காடு பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தன்.. ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள் ஜெயராமன், துரைசாமி ஆகியோர் மின் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு குறித்து பேசினார். 
மின் நுகர்வோர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர். 
நிகழ்ச்சியில் சோலார் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 நுகர்வோர் உரிமைகள் இயக்கம் நிர்வாகிகள் ஆடிட்டர் சரவணன் ஆடிட்டர் செந்தில் ராசிபுரம் பூபதி மற்றும் பத்து ரூபாய் இயக்கம் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வழக்கறிஞர் சாந்தா நன்றி கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: