சனி, 11 மே, 2024

திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு மினி சுற்றுலா வேனில் நேற்று புறப்பட்டனர். வேனை மைசூரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டினார். அதில், 11 பயணிகள் இருந்தனர். 

மாலை 5 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 9வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: