வெள்ளி, 14 ஜூன், 2024

ஈரோட்டில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு

ஈரோட்டில் 10அடி நீளம் உள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் நீர்க்கசிவு துளையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்ததை அவ்வழியாக சென்ற கிருஷ்ணன் என்பவர் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீர்க்கசிவு துளையில் சிக்கிருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்பு மீட்கப்பட்ட மலப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது. பகலில் வாய்க்காலில் மலைப்பாம்பு சிக்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: