சனி, 15 ஜூன், 2024

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், 2வது தளத்தில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும் ஜூன் 25ம் தேதி பெண்களுக்கான தையற்கலை இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது.

இந்த பயிற்சியானது, ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை 30 நாள்கள் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்குக்கு உட்பட்ட பெண்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களும், அவா்களது குடும்பத்தாரும் இப்பயிற்சியில் சேரலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.

விருப்பமுள்ளவா்கள் 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 8778323213 , 7200650604 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: