ஞாயிறு, 16 ஜூன், 2024

வளர்பிறை அஷ்டமியையொட்டி தென்னக காசி பைரவர் கோவிலில் மகாலட்சுமி யாகம்

ஈரோடு அருகே உள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியில் மஹாலட்சுமி யாகம்... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.
வளர்பிறை அஷ்டமி தினமான இன்று கோவில் வளாகத்தில் மஹாலட்சுமி யாகம் நடைபெற்றது. அஷ்டமி மஹாலட்சுமி யாகத்தில் கலந்து கொண்டால் இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மூலவர் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பல்வேறு திரவியங்களால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: