ஞாயிறு, 16 ஜூன், 2024

அமெரிக்காவின் நாசா NSS ISDC மாநாட்டில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று சாதனை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அமெரிக்காவின்  நாசா NSS ISDC மாநாட்டில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை. 

அமெரிக்காவின் நாசாவில் NSS IADC மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த 167 மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர். உலகின் வேறு எந்த நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் இந்த அளவிற்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குனர் திருமதி சீமா கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற நாசாவின் NSS விண்வெளி தீர்வு போட்டிகள் 2024ல் 28000 மாணவர்கள் இந்தியாவில் இருந்து மட்டும் கலந்து கொண்டனர். இதில் சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்து 639 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 62 செயல்திட்டங்கள் வெற்றி பெற்று ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து 11வது முறையாக உலக சாம்பியனாக வெற்றி பெற்று வெற்றி வாகை சூடியது. இதில் ஏழு செயல் திட்டங்கள் உலக அளவில் முதல் பரிசையும், 11 செயல் திட்டங்கள் உலக அளவில் இரண்டாவது பரிசையும், 15 செயல் திட்டங்கள் உலக அளவில் மூன்றாவது இடத்தையும், 29 செயல் திட்டங்கள் கௌரவ பரிசையும் வென்றது. 

மேலும் கல்வி சுற்றுலாவில் தமிழகத்தில் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த 32 மாணவர்கள் கலந்து கொண்டனர். வேறு எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் எந்த ஒரு மாணவரும் ISDCல் பங்கேற்கவில்லை. தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்து ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில்  கலைத்துறையில் வெற்றி பெற்று 500 டாலர்கள் பரிசு பெற்ற ஒரே மாணவர் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.

அதுமட்டுமில்லாமல் இந்த மாநாட்டில் 500 டாலர்கள் பரிசு பெற்ற ஒரே மாணவர் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சைதன்யா பள்ளி குழுவானது கடந்த 13 ஆண்டுகளாக நாசாவின் NSS ISDCல் கலந்து கொண்ட ஒரே குழுவாகும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த உலக நாடுகளிலோ எந்த ஒரு நிறுவனமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. 

மாநாடு நாட்களில் எங்கள் பள்ளியின் மாணவர்கள் நாசா விண்வெளி வீரர்கள் ஜோஸ் எம் அர்னான்டஸ் மற்றும் பிரைன் வெர்ஸ்ட்ரீக் கருத்தியல் வடிவமைப்பாளர் ஸ்பெக்ப்ஸ்.காம் ஆகியோரை சந்தித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

ஸ்ரீ சைதன்யா பள்ளி ஆனது கிருக்பித் ஆய்வகம், கலிபோர்னியா அறிவியல் மையம் மற்றும் ஆப்பிள் பார்க், சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள ஐபிஎம் அருங்காட்சியகம், சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு சென்று ஸ்டெம் பட்டறையில் கலந்து கொண்டு பல பொறியியற் திறன்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப போக்குகள் பற்றிய தகவல்களை கற்றுக் கொண்டது. சுற்றுப்பயணம் முழுவதும் மாணவர்கள் குழு அமெரிக்காவைப் பற்றிய எண்ணிலடங்கா அறிவையும் மற்றும் நாட்டின் தொழில்நுட்ப  சமூகம் மற்றும் பொருளாதாரம் முன்னேற்றத்தின் நேர்த்தியையும் அறிந்து கொண்டனர். 

நாசாவின் NSS மாநாட்டில் கலந்து கொள்ள பெரும் முயற்சி செய்த ஸ்ரீ சைதன்யா பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாசாவின் NSS ISDC மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஸ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குனர் திருமதி சீமா அவர்கள் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.




শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: