வெள்ளி, 12 ஜூலை, 2024

20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்.. இல்லம் தேடி எம்எல்ஏ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் நேரில் ஆய்வு..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இல்லம் தேடி MLA திட்டத்தின் கீழ் மந்திவளவு காட்டூர் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை.. மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் தொடங்கி வைத்தார். 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு கருக்கல்வாடி ஊராட்சி, சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மந்திவளவு பகுதியில் இல்லம் தேடி MLA திட்டத்தின் கீழ் மக்கள் குறைகளை கேட்க சென்றார். அப்பொழுது, அந்த பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதாகவும், கோடை காலங்களில் குடிநீரின்றி மிகுந்த கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து சில மேற்கு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தருவதாக உறுதி அளித்து இருந்தார். 

அது நடைபெறையில் தொகுதி மேம்பாட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி ஒதுக்கீடு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணிகளை பொதுமக்களுடன் இணைந்து தொடங்கி வைத்தார். 

பின்னர் அந்த பகுதியில் சிறப்பாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். 

பின்னர் கே ஆர் தோப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பிள்ளை சாலையில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் முதியவர்களும் மற்றும் பயணிகள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அது மட்டுமில்லாமல் இங்கு பேருந்து நிழல் கூடம் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் இடம் கோரிக்கையை வைத்ததை அடுத்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தரமான முறையில் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் தாரமங்கலம் ஒன்றியக் குழு தலைவர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் சரவண கந்தன், கருக்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் தங்கராசு உட்பட கட்சியின் முக்கிய நிர்வாக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: