செவ்வாய், 16 ஜூலை, 2024

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடம் சுமார் 2 கோடிவரை பண மோசடி

சேலம்.

S.K. சுரேஷ்பாபு.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடம் சுமார் 2 கோடிவரை  பண மோசடி.. பாதிக்கப்பட்டவர்களுடன் கூட்டு நடவடிக்கை குழு சேலம் CCB காவல் நிலையத்தில் புகார்...

சேலம்- நாமக்கல் மாவட்டங்களை சார்ந்த ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்களிடம் அமேசான் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் இரட்டிப்பு பணம் பெறலாம் என்ற ஆசை காட்டி நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த கனகராஜ்  மனோகரன், கந்தசாமி  ஆகியோர் சுமார் 100 ஓய்வூதியம் பெறும் நபர்களிடம் கிட்டதட்ட  2 கோடி வரை பண மோசடி செய்துள்ளனர். பாதிக்கபட்ட ஓய்வூதியர் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழ - தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகி தி்ரு சரஸ்ராம்ரவி மற்றும் ராஜசேகர்  ஆகியோரிடம்  அளித்த புகார் அடிப்படையில் பண மோசடி கும்பலை  கைது செய்ய வலியுறுத்தி சேலம் மாநகர்  மத்திய குற்ற பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளிக்கபட்டு விசாரணை துவக்கபட்டுள்ளது.ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள்/ அரசு ஊழியர்கள் கவனமாக தங்களது ஒய்வூதிய பண தொகையை பாதுகாப்பாக வங்கியில் அல்லது நிலங்களில் முதலீடு செய்து பயன் பெறவும்.போலி ஏஜன்டுகள், அங்கிகாரம் பெறாத நிதி  நிறுவனங்களை நம்பி தங்களது பணத்தை அதிக வட்டிக்கு ஆசைபட்டு முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என கூட்டு நடவடிக்கை  குழ ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம்ரவி அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: