புதன், 17 ஜூலை, 2024

ஆடி முதல் நாள்... தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 300 நபர்களுக்கு இலவசமாக தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்கள் வினியோகம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.
.
ஆடி முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 300 பேருக்கு இலவச தேங்காய் குச்சி தேங்காய் மற்றும் இனிப்புகள். 

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தெய்வீக மாதமாக கருதப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆடி பண்டிகை என்று தேங்காய் சுட்டு விநாயகர் விநாயகப் பெருமானுக்கு படையல் இட்டு இந்துக்கள் வழிபடுவது வழக்கம். 
அதன் அடிப்படையில் ஆடி முதல் நாளான என்று சேலம் ஜான்சன் நகர் ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில், ஆடிப் பண்டிகையை ஒட்டி நண்பர்கள் குழுவின் சொந்த செலவில் ஆண்டுதோறும் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், 300 நபர்களுக்கு தேங்காய் குச்சி தேங்காய் மற்றும் தேங்காய் வினுள் செலுத்தப்படும் தின்பண்டங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. நண்பர்கள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேவதாஸ் தலைமை தாங்கினார். 
நிகழ்ச்சியில் ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு செயலாளர் சண்முகவேல் பொருளாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு 300 பேருக்கு தங்களுக்கு சொந்த செலவில் இலவசமாக தேங்காய் சுடுவதற்கான மூலப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழ்மணி சிலம்பரசன் பழனி மற்றும் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: