வெள்ளி, 12 ஜூலை, 2024

என்னுடைய 8 லட்ச ரூபாய் சரக்கு எனக்கு வேணும் ... கதறிய குட்கா ஓனர் ...! 8 லட்ச ரூபாய் மதிப்பிலான சரக்குடன் ஈச்சர் வேனை கடத்திய கான்ஸ்டபில்கள் ...! ஓவர் நைட்டில் பங்கமா நடந்த ஒரு சம்பவம்..!

#SHABA NEWS TAMIL #EXCLUSIVE

என்னுடைய 8 லட்ச ரூபாய் சரக்கு எனக்கு வேணும் ... கதறிய குட்கா ஓனர் ...! எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான சரக்குடன் ஈச்சர் வேனை கடத்திய கான்ஸ்டபில்கள் ...! ஓவர் நைட்டில் பங்கமா ஈரோட்டில் நடந்த ஒரு சம்பவம்..!


ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடுதுறை சந்திப்பு அருகே நேற்று மாலை ஈச்சர் வேனை தடுத்து நிறுத்திய பிரபு, சிவகுமார் ( கான்ஸ்டபில்கள் ) என்ற இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் அந்த ஈச்சர் வேனை சோதனை செய்தனர், 

அந்த வேனில் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது, இதனை அடுத்து அந்த ஈச்சர் வேலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், போக்குவரத்து காவல்துறை கான்ஸ்டபில்கள் பிரபு, சிவகுமார் ஆகியோரின் இரண்டு நண்பர்களை அழைத்து வந்து 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்த வேனை, வெப்படை அருகே எடுத்துச் சென்று, ஒரு வீட்டில்  குட்காகா பொருட்களை மட்டும் இறக்கி வைத்து விட்டு, வேனை ஓட்டுநருடன் திருப்பி அனுப்பிவிட்டனர்.

அந்த ஓட்டுனர், சம்பந்தப்பட்ட ஓனருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குட்கா பொருட்களை கடத்திய ஓனரே..! ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்,

உடனடியாக களத்தில் இறங்கிய நேர்மையான காவல்துறை அதிகாரிகளால், பிரபு, சிவகுமார் ஆகிய கான்ஸ்டபிள்யூடல்களிடன் விடிய விடிய உரிய முறையில் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்காவை ஈச்சர் வேனில் கொண்டுவரப்பட்டதும், அந்த குட்காவை வெப்படை வரை கடத்தி ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும், நேர்மையான அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து,

ஓவர் நைட்டுக்குள் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பிரபு மற்றும் சிவகுமாரிமிடம் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்து, தற்போது பவானி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பிரபு,  சிவகுமார் ஆகிய இரு போக்குவரத்து காவல்துறையினரை, ஆயுதப்படை பிரிவிற்கு ( எ.ஆர்)  ஓவர் நைட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 

இதே கான்ஸ்டபில்கள், வேற ஏதாவது பங்கமான சம்பவத்தில் ஈடுபட்டு இருக்காங்களா? அப்பிடிங்கிறதையும் விசாரிச்சிட்டு வராங்க .. நேர்மையான காவல்துறை அதிகாரிகள் ..!

#SHABA NEWS TAMIL #EXCLUSIVE👍

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: