சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
மொஹரம் பண்டிகையையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் இறைத்தூதர் பேரன்கள் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக மொழிவேடமிட்டு நடனமாடி நேர்த்திக்கடன்.
இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் மொகரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் விதமாக கடைப்பிடித்து இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள், சேலம் கோட்டை பகுதியில் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பேரன்கள் ஆன அசேன் மற்றும் உசேன் திருப்பெயரால் மொகரம் பண்டிகையை ஒட்டி புலிவேடுமிட்டு நடனமாடி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சேலம் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊர்வலமாக சென்ற மழையையும் பொருட்படுத்தாமல் நாள் முழுவதும் இறைத்தூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு புலி வேடமிட்ட நபர்களுடன் இணைந்து பறை இசைக்கு ஏற்றவாறு நடனமாடி நாள் முழுவதும் தங்களது அனுஷ்டிப்பை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
கோட்டை பகுதியை சேர்ந்த பண்டு என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அஜித்அலி, நூர்அகமது, சபீர் அகமது, சவுகத்அலி, ஷேக்மதார், பாஷா, அஜிம் மற்றும் ஆரிப் உள்ளிட்ட உங்கிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: