புதன், 24 ஜூலை, 2024

பாமக நிர்வாகிகள் மீது அவதூறு செய்தி பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் பாமக இளைஞர் சங்கத்தின் சார்பில் புகார் மனு.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு 

பாமக நிர்வாகிகள் மீது வேண்டுமென்றே அவதூறு செய்தி பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்கத்தின் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு. 

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார் மற்றும் பாமக இளைஞர் அணியினர் சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்திருந்தனர்.

அந்த மனுவில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமிழுக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் தங்களை அர்ப்பணித்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் அதேபோல பாமக தொண்டர்கள் மீதும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களையும் தகாத வார்த்தைகளையும் fhektv2018@g.mail.com - 98849 00478 என்ற இணையதள முகவரியில் வேண்டுமென்றே பேசி வருகின்றனர். மேலும் இது போன்ற கருத்துக்களை பரப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தர வேண்டுகிறேன் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவினை பெற்றுக் கொண்ட சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக பாமக சேலம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர் அன்புமணி உட்பட படைச்செயலாளர் இளவரசன், மாவட்ட வன்னிய இளைஞர் சங்க செயலாளர் சங்கர்,AK நிர்மல், மற்றும் அருண்குமார் உடன் இருந்தனர்
.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: