வியாழன், 18 ஜூலை, 2024

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி ஏழாவது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டர். இவரின் வீட்டில் கடந்த மாதம் ஜூன் 8ம் தேதி 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடிட்டர் சுப்பிரமணியின் கார் டிரைவரான ஈரோடு திண்டல் காரப்பாறை மெடிக்கல் நகரை சேர்ந்த சத்யன் (வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஆலப்பள்ளி ரோடு திருமலை நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 36), வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோடி குப்பம் ஆர்.கொள்ளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரனின் மகன் விக்னேஷ் (வயது 24) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், ரூ.19 லட்சம் மற்றும் 90 பவுன் நகைகளை மீட்டனர்.

இந்நிலையில், ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம், கென்னடிகுப்பம் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் குமரன் (வயது 40) என்பவரை போலீசார் நேற்று (18ம் தேதி) கைது செய்தனர். அவரிடம் இருந்து, 42 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: