நடப்பாண்டு விழா இன்று (17ம் தேதி) காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக, புதுப்பாளையத்தில் உள்ள மடப்பள்ளியில் இருந்து குருநாதசுவாமி கோயில் வனத்துக்கு சுவாமி சிலை, கொண்டு செல்லப்பட்டது. அங்கு பூச்சாட்டுதல் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.
இதையடுத்து வரும் 25ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 31ம் தேதி முதல் வனபூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. அன்று முதல், தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற மாட்டுச் சந்தை, குதிரைச்சந்தை தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. ஆகஸ்ட் 14ம் தேதி பால் பூஜையுடன் ஆடித் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
0 coment rios: