சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆடி முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி ஏழை எளியவர்களுக்கு இலவச தேங்காய் குச்சி தேங்காய் மற்றும் இனிப்புகளை தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தெய்வீக மாதமாக கருதப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆடி பண்டிகை என்று தேங்காய் சுட்டு விநாயகர் விநாயகப் பெருமானுக்கு படையல் இட்டு இந்துக்கள் வழிபடுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் ஆடி முதல் நாளான என்று சேலம் ஜான்சன் நகர் பகுதியில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில், ஆடிப் பண்டிகையை ஒட்டி தனது சொந்த செலவில் ஆண்டுதோறும் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், 300 நபர்களுக்கு தேங்காய் குச்சி தேங்காய் மற்றும் தேங்காய் வினுள் செலுத்தப்படும் தின்பண்டங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவிதலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு தங்களுக்கு சொந்த செலவில் இலவசமாக தேங்காய் சுடுவதற்கான மூலப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: