வெள்ளி, 19 ஜூலை, 2024

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தலைமைக் காவலர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் குமார் (வயது 45). மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவிலும் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று இரவு வடவள்ளியில் உள்ள வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் தலைமை காவலர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில், உயிரிழந்த தலைமை காவலர் குமாருக்கு பவித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: