செவ்வாய், 16 ஜூலை, 2024

ஈரோடு மாநகராட்சி ஆணையராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் நியமனம்

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக வி.சிவகிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை, சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையாளராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நிர்வாக பணிகளை ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளராக பணியாற்றி வந்த சரவணக்குமார் மேற்கொண்டு வந்தார். மேலும், ஈரோடு மாநகராட்சி ஆணையர் பணி காலியாக இருப்பதால், நிர்வாக பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க துணை ஆணையர் சரவணக்குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் சிவராசு கடந்த 13ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் வளர்ச்சி திட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த டாக்டர்.நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளராக இன்று (16ம் தேதி) நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்பார் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: