சனி, 20 ஜூலை, 2024

தாட்கோ மற்றும் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாத சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தாட்கோ மற்றும் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் மகளிர் காண முழு பங்களிப்பை செயல்படுத்தாத சேலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது என VCK தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் நடைபெற்றது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் சரசு ராம் ரவி தலைமையில் நடைபெற்று இருந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர். 
அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவை மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்களுக்கு எதிராக உள்ள புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் மற்றும் தாட்கோ, அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் மகளிர் காண பங்களிப்பை முழுமையாக செயல்படுத்தாமல் உள்ள சேலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் பகுத்தறிவன், சந்திரசேகர், மாயாவதி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ் நிலவு, வணங்காமுடி மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: