சனி, 27 ஜூலை, 2024

சிறந்த சமூக சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்று குவித்துள்ள சேலம் சமூக ஆர்வலருக்கு கௌரவ முனைவர் பட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

OXFAA பல்கலைக்கழகத்தின் சார்பில் சேலம் சமூக ஆர்வலர் Dr. நாகா.அரவிந்தன் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு..

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் தலைவரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவருமான Dr. அரவிந்தன் அவர்களின் சிறந்த சமூக பணியினை பாராட்டி பல்வேறு பல்கலைக்கழகங்கள் அமைப்புகளின் சார்பில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஆக்ஸ்ஃபா (Oxfaa) பல்கலைக்கழகம் சார்பாக தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர்  நாகா ஆர்.அரவிந்தன் அவர்களுக்கு இன்று சென்னையி்ல் நடைபெற்ற விழாவில் சிறந்த சமூக சேவைக்கான முனைவ‌ர் பட்டம் பல்கலைக்கழக நிறுவனர் நல்லமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் நிதியின் குரல் ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் கக்கன் அவர்களின் பேத்தி இமையா கக்கன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவம் செய்தனர்.
சிறந்த சமூகப் பணி செய்ததை கௌரவிக்கும் விதமாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் 200க்கும் மேற்பட்ட விருதுகளை Dr. நாகா. அரவிந்தன் அவர்கள்  பெற்று குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: