வியாழன், 25 ஜூலை, 2024

உலகத்திற்கே அன்னம் அளித்து நலிவடைந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு அறுசுவை விருந்து படைத்து அழகு பார்த்த காமெடி நடிகர் பெஞ்சமின்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு...

விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலைவாழை இலையில் அறுசுவை விருந்து அளித்து அசத்தல். 

இந்திய திருநாட்டின் முதுகெலும்பாகத் திகழ்ந்துவரும் விவசாய தொழிலில் இன்றைய நிலை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் எத்தனை புதிய நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அது கடைக்கோடி விவசாயிகள் வரை சென்று சேர்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை. 
இது ஒரு புறம் இருக்க, திரைப்பட நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏழை எளியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் எண்ணற்ற பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து வருகின்றார். அந்த வகையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் அவர்களின் நெருங்கிய நண்பர் நவீன் என்பவரது பிறந்தநாளை சிறப்பாகவும் அதே சமயத்தில் வித்தியாசமாகவும் கொண்டாடும் விதமாக, சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நத்தக்காடு பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி தங்கராஜ் அவர்களை நகைச்சுவை நடிகரும் பிறந்தநாள் கொண்டாடும் நபருமான இருவரும் அணுகியுள்ளனர். 
இதற்கு விவசாயி தங்கராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நத்தக்காடு பகுதியில் நத்தக்காடு மற்றும் புத்தூர் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்து விவசாயிகளுக்கு விவசாயம் காப்போம் என்று தலைப்பில், தலைவாழை இலை போட்டு அறுசுவை விருந்து நகைச்சுவை நடிகரின் நண்பர் பிறந்தநாள் விருந்தாக அழிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரும் விவசாயம் போயிட்டு வரும் தற்போதைய காலகட்டத்தில் தங்களை போன்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஒரே இடத்தில் அமர வைத்து தலை வாழை இலையில் அறுசுவை விருந்து அளித்த நல்ல உள்ளங்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: