வெள்ளி, 12 ஜூலை, 2024

SDCBA அவசர பொதுக்குழு கூட்டம். SBA சங்க கூட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அவசர தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

SBA மற்றும் SDCBA உறுப்பினர்களிடையே மோதல் போக்கை உருவாக்கும் வண்ணம் நமது முன்னாள் சங்க உறுப்பினர் பேசிய விவகாரம்.... இந்த பிரச்சனை தொடர்பாக வரும் 15ஆம் தேதி அனைத்து உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டு கூட்டம்... SDCBA அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.....

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. SDCBA தலைவர் ஜெ.மு. இமயவரபன் தலைமையில் நடைபெற்ற இந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சோக்காஸ் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் மற்றும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நேற்று நடைபெற்ற சேலம் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசி சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கை உருவாக்கு வண்ணம் நடந்த முன்னாள் நமது சங்க உறுப்பினர் பேசியது குறித்தும், முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு இன்று கூடியது அது மட்டுமல்லாமல் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து அனைத்து உறுப்பினர்கள் இடையேயும் கருத்துகளை அறிய வருகின்ற 15. 7.2024 அன்று நமது சங்கத்தின் செயற்குழு கூடுவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 
அதுமட்டுமில்லாமல் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள செயற்குழு கூட்டம் தொடர்பாக அதன் அறிவிப்பையும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சரவணன், துணை செயலாளர்கள் ரத்தினவேல் மற்றும் ஜோதி, நூலகர் மணிவண்ணன், செய்தி தொடர்பாளர் திருநாவுக்கரசு என பொதுக்குழு உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: