சனி, 31 ஆகஸ்ட், 2024

புன்செய் புளியம்பட்டி அருகே சேவல்களை வைத்து மெகா சூதாட்டம்: 13 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாரம்பாளையம் முந்திரிமேட்டில் சட்டவிரோதமாக சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 10க்கும் மேற்பட்டோர் கட்டு சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். 

இதில், சத்தியமங்கலம் உத்தண்டியூர் வீரமணிகண்டன் (வயது 33), பவானி எலாமடை அஜித் (வயது 26), சத்தியமங்கலம் பெருமாள் பாளையம் பிரேம் ஆனந்த் (வயது 31), கோவை மாவட்டம் அன்னூர் சசிகுமார் (வயது 30), பவானிசாகர் குடில் நகர் ரமேஷ் (வயது 40), தொப்பம்பாளையம் சுபாஷ் (வயது 24), அவினாசி திருமுருகன்பூண்டி மணிகண்டன் (வயது 26), அன்னூர் பச்சாபாளையம் பிரபாகரன் (வயது 32), கோவை பெருமாள் கோவில் கஞ்சப்பள்ளி யுவராஜ் (வயது 32), திருப்பூர் கணக்கம்பாளையம் சரவணன் (வயது 39), புங்கப்பள்ளி தினகரன் (வயது 25), நம்பியூர் வேமாண்டம்பாளையம் லோகநாதன் (வயது 64), புன்செய் புளியம்பட்டி தோட்ட சாலை ரமேஷ் குமார் (வயது 28) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள், ரூ.97,120 பணம், 11 செல்போன்கள், 5 சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: