சனி, 31 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் ஏடிஎம்மில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர் நேற்று முன்தினம் ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆந்திரா பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவர் தனது ஏடிஎம் கார்டு இயந்திரத்தில் செலுத்தி ரூ.7 ஆயிரம் எடுக்க முயன்றார்.

பின் எண்ணை பதிவு செய்தும் பணம் வரவில்லை. இதனால் அவர் தன்னுடைய ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் இருந்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பணம் எடுப்பதற்காக அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு வந்தார்.

அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் இடத்தில் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.7 ஆயிரம் இருந்தது. பின்னர் பிரபாகரன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு வரவேற்பறையில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் அந்த தொகையை கொடுத்துவிட்டு விவரத்தை கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, அந்த பணத்தை முத்துவிடம் ஒப்படைத்தனர். பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த பிரபாகரனை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: