சனி, 31 ஆகஸ்ட், 2024

கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லாமல் பண்ணாரி அம்மன் கோயிலில் இபிஎஸ் வழிபாடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியில் அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலம் மைசூரு, சாம்ராஜ் நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று (31ம் தேதி) சனிக்கிழமை காலை திடீரென பண்ணாரி அம்மன் கோயிலுக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வந்தார். பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு, வந்த எடப்பாடி பழனிசாமியை அங்கிருந்த பணியாளர்கள், பக்தர்கள் என பலரும் சூழ்ந்து கொண்டனர். பின்னர், புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கூட தகவல் சொல்லாமல் திடீரென வந்து பண்ணாரி கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றது ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: