திங்கள், 2 செப்டம்பர், 2024

அந்தியூர் அருகே வனப்பகுதியில் 108 ஆம்புலன்சிலேயே பிறந்த ஆண் குழந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மொண்டன். இவரது மனைவி சிவம்மா (வயது 32). சிவம்மா நிறைமாத கர்ப்பிணியான இருந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று (1ம் தேதி) மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. 

இதனையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேவர்மலை 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சிவம்மாவை மீட்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அப்போது, பர்கூர் மலைப்பகுதி தாமரை என்ற சென்றபோது, சிவம்மாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுநர் ஜி.கார்த்திக் ராஜா ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அவசர கால மருத்துவ நுட்புணர் வி.சதீஸ் பிரசவம் பார்த்தார். 

இதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நுட்புணர் சதீஸ் மற்றும் ஓட்டுநர் கார்த்திக் ராஜா ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: