திங்கள், 2 செப்டம்பர், 2024

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சார்பில் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணமடைந்த கட்டுமாத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் 4 நபர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதியுதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 10 நபர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிகளையும் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: