திங்கள், 2 செப்டம்பர், 2024

கல்குவாரி உரிமையாளர்களுடன் அதிகாரிகள் சமசரம்: நடவடிக்கை கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு

கல்குவாரி உரிமையாளர்களுடன் சமரசம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள் செயல்படுவதற்கான காலக்கெடு முடிந்தும், அதன் உரிமையாளர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதனால் பல விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. உதாரணமாக கோபி அருகே பூஞ்சை துரையம்பாளையத்தில் இதேபோல நடைபெற்றது.
வட்டாட்சியர் ஆய்வு செய்து ஸ்டார் புளூமெட்டல் குவாரிக்கு சீல் வைத்து அபராதம் விதித்தது. ஆனால் குவாரி தொடர்ந்து இயங்கியதில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதேபோல பர்கூர் மலையில் 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். காவல்துறை முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்துள்ளது, மலையை ஒட்டிய பகுதியில் கல்குவாரிக்கு ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

ஆனால் குவாரி நடத்துவோர் புறம்போக்கு நிலத்தை அபகரித்து இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர், அதற்கு பயன்படுத்தும் கனரக வாகனங்களால் பெஜலிடி, எலச்சிபாளையம், தேவர்மலை, தாமரைக்கரை வழியாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் கூட அவசரமாக செல்ல முடிவதில்லை.

இருசக்கர வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன, எனவே ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உரிமையாளர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தமிழ்ப்புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: