ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம்

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம்

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவல்பூந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவல்பூந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டி . சச்சிதானந்தம், மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி, மாநில வழக்கறிஞர் அணி ராதாகிருஷ்ணன், மொடக்குறிச்சி தேர்தல் பார்வையாளர் தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா என்கிற ஆசைத்தம்பி கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார்.
இக்கூட்டத்தில் ஈரோடு எம்பி., பிரகாஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு விஜயகுமார், சென்னிமலை செங்கோட்டையன், பெருந்துறை கேபி.சாமி, சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், கொண்டசாமி, கதிர்வேல் மற்றும் பேரூர் செயலாளர்கள் அவல்பூந்துறை சாமியப்பன் என்கிற சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி சரவணன், அரச்சலூர் கோவிந்தசாமி, வடுகபட்டி விஸ்வநாதன் உள்ளிட்ட மாவட்ட மாநகர ஒன்றிய பேரூர் கழக அனைத்து நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: