செவ்வாய், 3 செப்டம்பர், 2024

பெருந்துறை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இன்று (3ம் தேதி) மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.46.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப்பணியினையும், பெருந்துறையில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு நூலகத்தில் பயில வரும், மாணவ, மாணவியர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பெருந்துறை பேரூராட்சி, ஜீவா நகர் பகுதியில் பாதாள சாக்கடையுடன் வீட்டு கழிவு நீர் குழாய்களை இணைக்கும் பணியினையும், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டிடம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பெருந்துறை, சிலேடர் நகர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளின் வருகை, மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: