திங்கள், 2 செப்டம்பர், 2024

ஈரோட்டில் சொத்தை பறித்துக் கொண்டு அடித்துத் துரத்தியதாக மகன் மீது தாய் புகார்


ஈரோடு அருகே தாயின் சொத்தை அவருக்குத் தெரியாமல் மகன் அபகரித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு, ரங்கம்பாளையம் அருகே அண்ணா நகரைச் சேர்ந்தவர் அன்னபூரணி. இவருக்கு சொந்தமான 80 ச.மீ இடத்தை தனது மகன் பாலாஜி தனக்குத் தெரியாமல் மோசடியாக பதிவு ஆவணம் எழுதிப் பெற்றுள்ளார். 
அதன் பிறகு தன்னை வீட்டை விட்டு அடித்து துரத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான சொத்தில் தனது மகள் ரேணுகாவுடன் பாதுகாப்பாக வசிக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மனு வாங்கும் கூட்டரங்கின் தரையில் அமர்ந்து கண்ணீர் மல்க போராடிய மூதாட்டி அன்னபூரணியின் செயல் பார்த்தவர்களின் அனைவரின் உள்ளத்தையும் வேதனை அடைய செய்தது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: