திங்கள், 2 செப்டம்பர், 2024

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கணவர், மாமனாருடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அர்த்தனாரி (93). இவர் மகன் சுப்பிரமணி, மருமகள் ராதிகாவுடன் வசித்து வந்தார். அர்த்தனாரிக்கு வீரப்பம்பாளையம் பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலம் அவரது பெயரில் உள்ளது.
இந்நிலையில் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் அர்த்தனாரி அழைத்துக் கொண்டு அந்த நிலத்தை அவரது பெயருக்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர்களுக்கிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

 இந்நிலையில் நேற்று இரவு சரவணன் அர்த்தனாரி வீட்டில் கற்களை வீசி அவர்களை தகாத வார்த்தையில் பேசி உள்ளார். இதை அடுத்து இன்று காலை ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு அர்த்தநாரி தனது மகன் சுப்பிரமணி மற்றும் ராதிகாவுடன் வந்துள்ளார். அப்போது அவர்கள் எஸ்.பி. வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென ராதிகா தான் கொண்டு வந்த வாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி, கணவர் சுப்பிரமணி, மாமனார் அர்த்தனாரி ஆகியோர் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து ராதிகா இடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். 

பின்னர் அவர்கள் மீது தண்ணியை ஊற்றினர். இதனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அர்த்தநாரி மேற்கொண்ட நிலப் பிரச்சினை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: