திங்கள், 14 அக்டோபர், 2024

ஈரோட்டில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஈரோடு திண்டல், வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்க உள்ளது. இந்த முகாமை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்களான RELIANCE JIO INFOCOMM LIMITED, STRATEGI AUTOMATION, COGENT, DIGITAL INSTRUMENTATION AND CONTROL SYSTEMS, BRITANNIA, AUTOZERV, CAVINCARE, SRI SAKTHI SUGARS, ZENCORP TECHNO SOLUTIONS, URD MOTORS, MILKY MIST, HDFC LIFE INSURANCE, ASM DAIRY AND MILK PRODUCTS, SKM FEEDS, WHEELS INDIA LIMITED, EQUITAS SMALL FINANCE BANK உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

கூடுதல் விவரங்களுக்கு 8675412356, 9499055942 என்ற எண்களின் வாயிலாகவோ அல்லது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: