வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு வில்லரசம்பட்டி சிவபுரத்தில் மழை நீர் வடிகால் அமைப்பதற்கான அடிக்கல்  நாட்டு விழாவில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்ற பிறகு திண்டல் புது காலனி பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான திட்ட பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதனை அடுத்து திண்டல் சுகாதார நிலையம் எதிரில் நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்ற பிறகு முத்தம் பாளையம் பண்ணைக்காடு அரிஜன காலனியில் பேவர் பிளாக் அமைப்பதற்கான திட்டப் பணியையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டல் மணிராசு திண்டல் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

பின்னர் ,சென்னிமலை சாலையில் அண்ணா நகருக்கு செல்லும் வழியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் தார் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் , மாநகர மேயர் திருமதி. நாகரத்தினம் சுப்பிரமணியம், 
துணைச் செயலாளர் செந்தில்குமார் ,
மண்டல செயலாளர் சசிகுமார்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து உள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: