திங்கள், 28 அக்டோபர், 2024
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
ஞாயிறு, 27 அக்டோபர், 2024
கோபி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு: பொதுமக்கள் பீதி
பெருந்துறை: வடமாநில தொழிலாளர்களிடம் விற்க 20 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
சனி, 26 அக்டோபர், 2024
ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, தாய் உள்பட 3 பேர் கைது
பெருந்துறை அருகே குப்பை கிடங்கில் 2 டன் குட்கா புகையிலை பொருட்கள் அழிப்பு
வெள்ளி, 25 அக்டோபர், 2024
ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விற்பனை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.26) முழு வேலை நாளாக அறிவிப்பு
வியாழன், 24 அக்டோபர், 2024
ஈரோடு ஜவுளி கடையில் கூட்டத்தோடு நின்று துணிகளை திருடிய 3 பெண்கள் கைது
அந்தியூர் குப்பாண்டம்பாளையம் மனுநீதி நாள் முகாமில் 185 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
புதன், 23 அக்டோபர், 2024
ஈரோடு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.4.06 லட்சம் பறிமுதல்
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி அணை இன்று (அக்.24) மூடல்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: ஒருவர் கைது
கோபி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோட்டில் அக்.25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய், 22 அக்டோபர், 2024
ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான இரும்பு திருடியவர் கைது
ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.24) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியாக உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணைக்கு முக்கிய நீர்வரத்தாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறும் உள்ளன.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நடப்பாண்டில் முதல் முறையாக ஜூலை 30ம் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்தது. இதனிடையே, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக சரிந்ததாலும் 57 நாள்களுக்கு பிறகு செப்டம்பர் 25ம் தேதி அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு கீழே சரிந்தது.
தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து 29 நாட்களுக்கு பிறகு இன்று (23ம் தேதி) நடப்பாண்டில் 2வது முறையாக மீண்டும் 90 அடியை எட்டியது.
இன்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.64 அடியில் இருந்து 90.09 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணைக்கு வரும் நீரின் அளவு 2,649 கன அடியில் இருந்து 7,222 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 21.64 டிஎம்சியாக உள்ளது.